/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேன் மீது கார் மோதி நான்கு பேர் படுகாயம்
/
வேன் மீது கார் மோதி நான்கு பேர் படுகாயம்
ADDED : ஏப் 26, 2024 04:02 AM
கரூர்: காரும்,- ஆம்னி வேனும் மோதிய விபத்தில், நான்கு பேர் காயமடைந்தனர். மது போதையில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வரிக்காப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 45, இவரது மனைவி அன்னலட்சுமி, 31, மகன், மகளுடன் ஆம்னி வேனில் பயணம் மேற்கொண்டார்.
வேனை டிரைவர் தனபாலன், 27, ஓட்டி சென்றுள்ளார். கரூர் நத்தம் சாலையில், புத்தாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அதே சாலையில் புத்தாம்பட்டியை சேர்ந்த பாலாஜி, 41, என்பவர் ஓட்டி வந்த கார், ஆம்னி வேன் மீது மோதியது.
இதில் ஆம்னி வேன் டிரைவர் தனபாலன், வேனில் பயணித்த அன்னலட்சுமி உள்பட நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செந்தில்குமார் அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்பட காரணமான பாலாஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

