sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

/

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : டிச 16, 2025 05:40 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட விவசாயிகள், விதையின் ஈரப்-பதம் அறிந்து சேமிக்க வேண்டும் என, கரூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய குறைந்தபட்ச விதை அளவீடு பரிந்துரைத்த அளவில், விதையின் ஈரப்-பதம் அறிந்து சேமிக்க வேண்டும்.விதை அதிக முளைப்பு திறனுடன் இருக்கவும், உரிய காலம் வரை சேமிக்கவும் நெல், 13 சத-வீதம், சோயாபீன்ஸ், சிறுதானியங்கள், பப்பாளி, 12 சதவீதம், பயறு வகைககள், நிலக்கடலை, சூரி-யகாந்தி, எள், கொத்தவரை, பீட்ருட், பாலக்கீரை, 9 சதவீதம், முருங்கை, புளிச்சை, வெங்காயம், கத்தரி, மிளகாய், தக்காளி 8 சதவீதம், காலிபி-ளவர், முட்டைகோஸ், நுால்கோல், சுரை, பாகல், புடல், பீர்க்கு, பூசணி, பரங்கி, தர்ப்பூசணி, வெள்-ளரி ஆகியவை, 7 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு சேமிக்க வேண்டும்.

எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை, விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய் செலுத்தி கரூர் காந்தி கிராமம் தின்னப்பா நகரில் உள்ள, விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை பரி-சோதனை வாய்ப்பை, கரூர் மாவட்ட விவசா-யிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்-வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us