sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி அருகே கார் மோதி முதியவர் பலி; மற்றொருவர் காயம்

/

அரவக்குறிச்சி அருகே கார் மோதி முதியவர் பலி; மற்றொருவர் காயம்

அரவக்குறிச்சி அருகே கார் மோதி முதியவர் பலி; மற்றொருவர் காயம்

அரவக்குறிச்சி அருகே கார் மோதி முதியவர் பலி; மற்றொருவர் காயம்


ADDED : செப் 02, 2025 12:51 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, மலைக்கோவிலுார் சாலையோரத்தில் டூவீலருடன் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

அரவக்குறிச்சி அருகே மூலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 65. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பீம் தர்வஷன் மகன் ரோஷன், 30. இவர் தடாகோவில் பகுதியில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் மலைக்கோவிலுார் சர்வீஸ் ரோடு அருகே, டூவீலரை நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது கர்நாடக மாநிலம், பெங்களூரு மெகா சிட்டி காலனியை சேர்ந்த மாரியப்பன், 60, என்பவர் வேகமாக ஓட்டி வந்த இன்னோவா கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த இருவர் மீதும் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கந்தசாமி, ரோஷன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். ரோஷனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக, கார் ஓட்டி வந்த மாரியப்பன் மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.






      Dinamalar
      Follow us