/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகாதானபுரம் கிளை பாசன வாய்க்காலில் துாய்மை பணி
/
மகாதானபுரம் கிளை பாசன வாய்க்காலில் துாய்மை பணி
ADDED : அக் 25, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் கிளை பாசன வாய்க்காலில், துாய்மை பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் வழியாக, கிளை பாசன வாய்க்கால் பொய்கைப்புத்துார் பகுதியில் இருந்து செல்கிறது. மகாதானபுரம் பகுதியில் நெல், வாழைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வாய்க்காலில் அதிகமான செடிகள் வளர்ந்துள்ளதால், பாசனத்திற்கு தண்ணீர் குறைந்து செல்கிறது. இதையடுத்து, பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

