/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரடைப்பு ஏற்பட்டு மரவள்ளி புரோக்கர் பலி
/
மாரடைப்பு ஏற்பட்டு மரவள்ளி புரோக்கர் பலி
ADDED : டிச 29, 2024 01:04 AM
மாரடைப்பு ஏற்பட்டு
மரவள்ளி புரோக்கர் பலி
குளித்தலை, டிச. 29-
சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் கந்தசாமி, 65; மரவள்ளி புரோக்கர். இவர், நேற்று அதிகாலை, குளித்தலை சுற்றுப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்ய லாரியில் வந்தனர். காலை, 7:00 மணிக்கு அய்யர்மலையில் உள்ள ஒரு டீ கடையில் லாரியை நிறுத்தி உள்ளனர். அப்போது, கந்தசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, வழிதாங்க முடியாமல் துடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கந்தசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

