/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெற்றிலை விலை குறைவு: அதிர்ச்சியில் விவசாயிகள்
/
வெற்றிலை விலை குறைவு: அதிர்ச்சியில் விவசாயிகள்
ADDED : டிச 23, 2025 05:27 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், லாலாப்பேட்டை, மகிளிப்-பட்டி, சிந்தலவாடி, கருப்பத்துார், வதியம், மணத்-தட்டை, குளித்தலை, மருதுார், புகழூர், வேலாயு-தம்பாளையம் ஆகிய பகுதிகளில், வெற்றிலை விவசாயம் நடக்கிறது. நடப்பாண்டு வெற்றிலை சாகுபடி அதிகளவில் உள்ளது.
உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், மார்கழி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் இல்லாததால், விலை குறைந்துள்ளது. இதனால், வெற்றிலை விவசாயிகள் அதிர்ச்சியில் உள்-ளனர்.
இதுகுறித்து, வெற்றிலை விவசாயிகள் கூறிய-தாவது:காவிரியாற்றில் தண்ணீர் செல்வதால், நடப்-பாண்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. இதனால், வெற்றிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேலும், வெற்றிலைக்கு கடந்த, இரண்டு மாதங்-களுக்கு முன் இருந்த விலை தற்போது இல்லை. நடப்பு மார்கழி மாதத்தில், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் இல்லாததால் விலை குறைந்-துள்ளது. கடந்த வாரம், 104 கவுளி கொண்ட வெற்-றிலை இளம்பயிர், 6,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாகவும்; கற்பூர வெற்றிலை இளம்பயிர், 4,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது.
அதேபோல், வெற்றிலை முதியம் பயிர், 3,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாய்க்கும், கற்பூர வெற்றிலை முதியம் பயிர், 2,000 ரூபாயில் இருந்து, 1,250 ரூபாய்க்கும் விலை குறைந்துள்-ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

