sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்:சீமான பேச்சு

 அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்:சீமான பேச்சு

 அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்:சீமான பேச்சு


ADDED : ஏப் 04, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 11:12 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,'' என, நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே, நா.த.க., வேட்பாளர் வக்கீல் செல்வ.நன்மாறனை ஆதரித்து, நேற்று ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும், கள் பயன்படுத்தி வருகின்றனர். குளித்தலை பகுதியில் நிலம் வளம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்குவோம். வாழை அதிகம் சார்ந்து இருந்தால், அது சம்பந்தமான தொழிற்சாலைகளையும், இல்லையென்றால் எருக்கஞ்செடி, கற்றாழை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளை உருவாக்குவோம்.

மாட்டு சாணம் மற்றும் இயற்கை கழிவுகளில் இருந்து கிடைக்கும், இயற்கை எரிவாயு மூலம் தட்டுப்பாடற்ற எரிவாயு சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரை கூட தற்போது காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்குதடையின்றி கிடைக்கும். அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம் அளிக்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us