/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளிர் உரிமை துறை சார்பில் விழிப்புணர்வு
/
மகளிர் உரிமை துறை சார்பில் விழிப்புணர்வு
ADDED : நவ 08, 2025 04:06 AM
அரவக்குறிச்சி: கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரி-மைத்துறை சார்பில், குழந்தை திருமணம் தடுத்தல், பாலின சமத்-துவம், பெண்கள் முன்னேற்றம் போன்ற பல்வேறு சமூக பிரச்-னைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்-டது.
அரவக்குறிச்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராமிய நடனம், பாடல்கள், நாடகங்கள் மற்றும் பிற கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பாலின பாகுபாட்டை களைதல், பெண்களின் கல்வி மற்றும் பங்-கேற்பை மேம்படுத்துதல், குழந்தை திருமணம் தடுப்பு, பெண்க-ளுக்கான அரசு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அரவக்குறிச்சி தாசில்தார் பிரபாகர் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

