sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி அணை நீர்மட்டம் திருப்தி; ஆற்றுப்பகுதிகளில் பணிகள் சுறுசுறு

/

அமராவதி அணை நீர்மட்டம் திருப்தி; ஆற்றுப்பகுதிகளில் பணிகள் சுறுசுறு

அமராவதி அணை நீர்மட்டம் திருப்தி; ஆற்றுப்பகுதிகளில் பணிகள் சுறுசுறு

அமராவதி அணை நீர்மட்டம் திருப்தி; ஆற்றுப்பகுதிகளில் பணிகள் சுறுசுறு


ADDED : ஏப் 16, 2024 06:57 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : அமராவதி அணையின் நீர்மட்டம், திருப்திகரமாக இருப்பதால், கரூர் மாவட்ட ஆற்றுப் பகுதிகளில் சோளம் பயிரிட நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. சம்பா அறுவடை நிறைவு பெற்ற நிலையில், சோளம் பயிரிட நிலத்தை டிராக்டர், மாட்டு வண்டிகள் மூலம் சமன்படுத்தும் பணிகள், கோடை மழையை நம்பி, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் தொடங்கியுள்ளது.

ஒருவேளை, கோடை மழை தவறும் பட்சத்தில், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேலும், 90 அடி கொண்ட அணையின் நீர் மட்டம், 45.02 அடியை தாண்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us