/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் அ.தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்
/
குளித்தலையில் அ.தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்
ADDED : நவ 08, 2025 04:06 AM
குளித்தலை: குளித்தலை சட்டசபை தொகுதி அ.தி.மு.க., பாக கிளை பொறுப்-பாளர்கள் பி.எல்.ஏ., 2 திறன் மேம்பாட்டு ஆலோசனை கூட்டம்
நடந்தது.
நகர செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஒன்றிய செய-லர்கள் கருணாகரன், ரங்கசாமி, தொகுதி பொறுப்பாளர் சர-வணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர்
பேசியதாவது:
தினமும், 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ருபாய் வரை, காவிரியில் மணலை கடத்தி கொள்ளை அடித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், 2026 தேர்-தலில் தி.மு.க., அரசை தோற்கடிப்பது உங்கள் கையில் உள்ளது. வரும் தேர்தலில் அ.தி.மு.க., அமோகமாக வெற்றி பெறும். இ.பி.எஸ்., முதல்வராவார்.
இவ்வாறு பேசினார்.
மாவட்ட, ஒன்றிய, நகர செயலர்கள் மற்றும் பி.எல்.ஏ.,- 2 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

