/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிகளால் ஓட்டுனர்கள் அவதி
/
இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிகளால் ஓட்டுனர்கள் அவதி
இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிகளால் ஓட்டுனர்கள் அவதி
இணைப்பு சாலையில் சிதறிய ஜல்லிகளால் ஓட்டுனர்கள் அவதி
ADDED : ஏப் 21, 2024 07:25 AM
கரூர் : கரூர் அருகே, சிறுபாலத்தின் இணைப்பு சாலையில், தரமற்ற சிமென்ட் கலவையால் ஜல்லிக்கற்கள் சிதறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சியில் உள்ள, 48 வார்டுகளில் பல இடங்களில், சமீபத்தில், சாலையின் குறுக்கே, சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில், புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டது. சிறுபாலத்தின் இரண்டு இணைப்பு பகுதிகளில் இணைப்பு சாலையும் போடப்பட்டது.
அதில், பல இடங்களில் இணைப்பு சாலை தரமற்ற சிமென்ட் கலவையால் போடப்பட்டதால், சமீபத்தில் பெய்த மழையில் ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளது. குறிப்பாக, ஜவஹர் பஜாரில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளிட்ட, பல இடங்களில் ஜல்லி கற்கள் சாலையில் சிதறியுள்ளது. அதற்கு தரமற்ற சிமென்ட் கலவையே காரணம் என தெரிகிறது.
சிறு பாலம் கட்டப்படும் இடங்களில், இணைப்பு சாலை தரத்துடன் சிமென்ட் கலவை பயன்படுத்தபடுகிறதா என, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

