/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிகளவு பாரம் ஏற்றி செல்வதை தடுக்கணும்
/
அதிகளவு பாரம் ஏற்றி செல்வதை தடுக்கணும்
ADDED : ஏப் 25, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் நகர பகுதியில், சரக்கு வாகனங்களில் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்கின்றனர். இதனால், வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. லாரிகள் அதிகம் செல்லும் திருச்சி மற்றும் கோவை, ஈரோடு, வெங்கமேடு சாலைகளில், வாகனங்களில் சரக்குகளை மட்டுமல்ல, ஆட்களையும் ஏற்றி செல்கின்றனர். கரூர் நகர பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், அதிகளவில் பாரம் ஏற்றி செல்வோர்
மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

