sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மொபைல் போனில் பேசியபடி சென்றவர் டூ - வீலரில் மோதியதில் இருவர் படுகாயம்

/

மொபைல் போனில் பேசியபடி சென்றவர் டூ - வீலரில் மோதியதில் இருவர் படுகாயம்

மொபைல் போனில் பேசியபடி சென்றவர் டூ - வீலரில் மோதியதில் இருவர் படுகாயம்

மொபைல் போனில் பேசியபடி சென்றவர் டூ - வீலரில் மோதியதில் இருவர் படுகாயம்


ADDED : பிப் 09, 2024 12:49 AM

Google News

ADDED : பிப் 09, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவன் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20. இவரும், பெங்களூரைச் சேர்ந்த சரத்குமார், 25, என்பவரும், நண்பர்கள். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம், இரவு 9:00 மணியளவில், கலெக்டர் அலுவலகம் வழியாக காஞ்சிபுரம் நகரை நோக்கி வந்தனர்.

அப்போது, காவலான்கேட்டில், மொபைல்போன் பேசியபடியே சாலையின் குறுக்கே திடீரென ஓடிய நபர், இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதினார். இதில், மூன்று பேரும் கீழே விழுந்தனர். மொபைல் போன் பேசியபடியே சாலையை கடந்த நபர், அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

படுகாயமடைந்த விக்னேஷ் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையும், அருகில் இருந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து, சென்னை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து பதிவான 'சிசிடிவி' கேமரா காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us