sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சூதாட்டத்தில் தகராறு நண்பனை கத்தியால் குத்திய இருவருக்கு வலை

/

சூதாட்டத்தில் தகராறு நண்பனை கத்தியால் குத்திய இருவருக்கு வலை

சூதாட்டத்தில் தகராறு நண்பனை கத்தியால் குத்திய இருவருக்கு வலை

சூதாட்டத்தில் தகராறு நண்பனை கத்தியால் குத்திய இருவருக்கு வலை


ADDED : டிச 10, 2024 08:04 PM

Google News

ADDED : டிச 10, 2024 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அடுத்த, குண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் உதயசூரியன், 28, அதே பகுதியில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

சில நாட்களாக வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு அதே பகுதியில் உள்ள தன் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று, உதயசூரியன் அவரது நண்பர்களான அய்யப்பன், 32, ராஜேஷ், 34, உடன் மது அருந்தி விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு போது, அய்யப்பன் தொடர்ந்து தோல்வியடைந்து வந்துள்ளார்.

இருவருக்கும் எற்கெனவே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று உதயசூரியன், அய்யப்பனிடம் பணம் கேட்ட போது, அத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதயசூரியன் கழுத்தில் குத்தினார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அனுப்பினர். இது குறித்த புகாரின் படி, சுங்குவார்சத்திரம் போலீசார், அய்யப்பன் மற்றும் ராஜேஷ் இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us