sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழவேற்காடில் அடைகாக்கப்பட்டு கடலுக்குள் விட்ட ஆமை குஞ்சுகள்

/

பழவேற்காடில் அடைகாக்கப்பட்டு கடலுக்குள் விட்ட ஆமை குஞ்சுகள்

பழவேற்காடில் அடைகாக்கப்பட்டு கடலுக்குள் விட்ட ஆமை குஞ்சுகள்

பழவேற்காடில் அடைகாக்கப்பட்டு கடலுக்குள் விட்ட ஆமை குஞ்சுகள்


ADDED : மார் 14, 2024 02:15 AM

Google News

ADDED : மார் 14, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:பழவேற்காடு கடற்கரை பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் - மார்ச் மாதங்களில், ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

கடலை சுத்தம் செய்வதில், இவற்றின் பங்கு அதிகமாக இருப்பதால், அவற்றை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல், பழவேற்காடு வனத்துறையினர், முகத்துவாரம் பகுதியில் இருந்து காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரை பகுதிகளில், தினமும் இரவு நேரங்களில் பயணித்து, 9,000த்துக்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகளை சேகரித்துள்ளனர்.

அவற்றை பாதுகாப்பதற்காக பழவேற்காடு, அரங்கம் குப்பம் கடற்கரை பகுதியில், இதற்காக பொறிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு ஒரு அடி ஆழத்தில் மண் தோண்டி, சேகரித்து வரும் முட்டைகளை புதைத்து பாதுகாக்கப்படுகின்றன.

நேற்று முன்தினம் இரவு, பழவேற்காடு வனச்சரக அலுவலர் ரூஸ்ப் வெஸ்லி, ஆமை முட்டைகள் அடைகாத்து வைக்கப்பட்டுள்ள பொறிப்பகத்தை பார்வையிட்டார்.

தமிழக கால்நடை மருத்துவ குழுவினர், மத்திய கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் உடனிருந்தனர்.

குழிகளில் அடைகாத்து வைக்கப்பட்டிருந்த, 300க்கும் அதிகமான முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளிவந்திருப்பதை கண்டனர்.

இதையடுத்து, அவற்றை பாதுகாப்பாக கடற்கரையில் சிறிது நேரம் உலாவவிட்டனர். பின், அதே பகுதியில் கடலுக்குள் கொண்டு சென்று விடப்பட்டன.

சேகரித்து வைக்கப்பட்டுள்ள முட்டைகள் தினமும் கண்காணிக்கப்பட்டு, பொறிக்கும் குஞ்சுகள் அவ்வப்போது கடலில் விடப்படும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us