sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கூரத்தாழ்வான் மஹோற்சவம் புஷ்ப பல்லக்குடன் நிறைவு

/

கூரத்தாழ்வான் மஹோற்சவம் புஷ்ப பல்லக்குடன் நிறைவு

கூரத்தாழ்வான் மஹோற்சவம் புஷ்ப பல்லக்குடன் நிறைவு

கூரத்தாழ்வான் மஹோற்சவம் புஷ்ப பல்லக்குடன் நிறைவு


ADDED : பிப் 05, 2024 03:54 AM

Google News

ADDED : பிப் 05, 2024 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் 1,014வது திருவவதார மஹோற்சவம் கடந்த மாதம் 22ல், திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடுடன் துவங்கியது.

தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். இதில், ஒன்பதாம் நாள் உற்சவமான ஜன., 30ல் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

இதில், 13வது நாளான நேற்று முன்தினம் காலை, விடையாற்றி 3ம் நாள் திருமஞ்சனமும், இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.

இதில், மல்லி, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட மலர்களில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் வீதியுலா வந்தார்.

புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் 13 நாட்களாக நடந்து வந்த கூரத்தாழ்வானின் 1,014வது திருவவதார மஹோற்சவம் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us