sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 14 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

/

 14 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

 14 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

 14 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்


ADDED : நவ 27, 2025 04:42 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சி மாவட்டத்தில், 14 ஊராட்சிகளில், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு - செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது. தற்போது, 21வது சுற்றுக்கு மாகரல், ஒழுக்கோல்பட்டு, திம்மசமுத்திரம், வில்லிவலம், நாயக்கன்குப்பம், திருமங்கலம், செல்வழிமங்கலம், பரணிபுத்துார், மாடம்பாக்கம், ஒரக்காட்டுப்பேட்டை, ஒழையூர், சிறுதாமூர், வயலக்காவூர், சாத்தணஞ்சேரி ஆகிய, 14 ஊராட்சிகளில் சமூக தணிக்கை நடைபெறுகிறது.

இதற்கு, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், நாளை நடைபெறும். நிறை, குறைக ளை பொதுமக்கள் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us