/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பென்னலுாரில் மின்னழுத்த பிரச்னை
/
பென்னலுாரில் மின்னழுத்த பிரச்னை
ADDED : மார் 14, 2024 01:16 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பென்னலுார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு உத்திரமேரூர் மின் பகிர்வான் வட்டம் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாக இப்பகுதியில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுகிறது.
இதனால், பென்னலுார் கிராமத்தில் இரவு நேரங்களில் டியூப்லைட் ஒளிராமலும், 'டிவி'க்கள் இயங்காமலும், மின்விசிறிகள் வேகமற்று சுழலுதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன.
மேலும், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட உபகரண பொருட்கள் அடிக்கடி பழுதாவதாகவும், இதனால், பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அப்பகுதி வாசிகள் புலம்புகின்றனர்.
எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண பென்னலுாரில் புதிய மின்மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

