sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு விழா

/

 காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு விழா

 காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு விழா

 காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு விழா


ADDED : டிச 25, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, வரும் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.

காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில், 44வது திவ்ய தேசமாக திகழ்கிறது.

ஆண்டுதோறும் இக் கோவிலில் வைகுண்ட ஏகா தசியன்று, சொர்க் க வாசல் திறப்பு விழா நடைபெறும். ஏகாதசி சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு வரும் 30ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, காஞ்சி புரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ் குமார் கூறியதாவது:

சொர்க்கவாசல் திறப்பையொட்டி, வரும் 30ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு கோபூஜையும், தொடர்ந்து, சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம் உள்ளிட்டவை நடக்கிறது. அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருள்கிறார்.

கோவில் வளாகத்தில் புதிதாக கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள தோட்ட மண்டபத்தில், காலை 11:00 மணிக்கு திருமஞ்சனமும், மதியம் 2:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும் நடக்கிறது.

இரவு 7:00 மணிக்கு பெருமாள் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு, மாட வீதி வழியாக கோவில் வந்தடைந்து, சொர்க்கவாசல் வழியாக நம்மாழ்வாரை அழைத்து செல்லும் நிகழ்வு நடக்கிறது.

சிறப்பு சேவை கட்டணம் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலமும், கோவில் வளாக நுழைவு சீட்டு முகாமில் கிடைக்கும். வழக்கம்போல, இலவச தரிசன சேவை, நாள் முழுதும் உண்டு.

கடந்த 50 ஆண்டு களுக்குப்பின் இக்கோவிலில் பகல்பத்து, ராபத்து உத்சவம் கடந்த 20ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us