sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 1,008 கலச அபிஷேகத்துடன் மண்டல பூஜை

/

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 1,008 கலச அபிஷேகத்துடன் மண்டல பூஜை

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 1,008 கலச அபிஷேகத்துடன் மண்டல பூஜை

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 1,008 கலச அபிஷேகத்துடன் மண்டல பூஜை


ADDED : ஆக 25, 2025 12:53 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நிறைவடைந்தது.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாளிக்கிறார்.

இக்கோவிலில், 17 ஆண்டுகள் பின், கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, 48 நாட்கள் காலை, மாலை மண்டல பூஜை நடந்தது.

மண்டல பூஜையின் கடைசி நாளான நேற்று காலை, மூலவர் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு, 1,008 கலச அபிஷேகம் நடந்தது.

தொடந்து, பிரகார மூர்த்திகளான விஜய விநாயகர், சண்முகர், தேவி திரிபுரசுந்தரி கருமாரியம்மன், உற்சவ மூர்த்திகளுக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us