/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புகார் பெட்டி ; வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
காஞ்சி புகார் பெட்டி ; வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சி புகார் பெட்டி ; வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காஞ்சி புகார் பெட்டி ; வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 14, 2025 11:45 PM

காஞ்சிபுரம் கீரை மண்டபம் பகுதியில் இருந்து, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மட்டுமின்றி வந்தவாசி சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்வோர் வளத்தீஸ்வரன் கோவில் தெரு வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், தனியார் மருத்துவமனை அருகில், விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் தீட்டப்படாமலும், வேகத்தடையின் மீது, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமலும் உள்ளதால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கே.ரஜினிகாந்த், காஞ்சிபுரம்.

