sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அம்மிக்கல்லை போட்டு உ.பி., நபர் படுகொலை

/

அம்மிக்கல்லை போட்டு உ.பி., நபர் படுகொலை

அம்மிக்கல்லை போட்டு உ.பி., நபர் படுகொலை

அம்மிக்கல்லை போட்டு உ.பி., நபர் படுகொலை


ADDED : பிப் 27, 2024 10:21 PM

Google News

ADDED : பிப் 27, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சஹாரி, 40, மற்றும் சோட்டு, 35. கூலித் தொழிலாளர்களான இருவரும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளக்கடி கோவில் தோப்புத் தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

காஞ்சிபுரத்தில் பெயின்ட் அடிக்கும் வேலை மற்றும் பிற வகையான கூலி வேலை செய்து வந்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு, இருவரும் வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், கோபமடைந்த சஹாரி, சோட்டுவின் தலை மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து, அங்கிருந்து தப்பியுள்ளார்.

வட மாநில தொழிலாளர்கள் இரு நாட்களாக வராததால், அருகில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து, விஷ்ணு காஞ்சி போலீசார் நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்று பார்த்த போது, சோட்டு என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

சடலத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து, சஹாரியை தேடி வந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் தேரடி பகுதியில் இருந்த சஹாரியை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us