sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தெரேசாபுரத்தில் நிழற்குடை இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் அவதி

/

தெரேசாபுரத்தில் நிழற்குடை இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் அவதி

தெரேசாபுரத்தில் நிழற்குடை இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் அவதி

தெரேசாபுரத்தில் நிழற்குடை இல்லாததால் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் அவதி


ADDED : ஏப் 18, 2024 10:07 PM

Google News

ADDED : ஏப் 18, 2024 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் அடுத்த, தெரேசாபுரத்தில், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது. இதனருகே, உள்ள தனியார் பள்ளியில் 2,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த பேருந்து நிறுத்தம் வழியே, தாம்பரம் -- ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் -- செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடத்தின் வழியே, ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்து சென்று வருகின்றன.

அப்பகுதியில், இயங்கி வரும் ஏராளமான தனியார் தொழிற்சாலையில் பல ஆயிரக்கணக்கான உழியர்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பயணியர், வாட்டி வதைக்கும் கடும் வெயிலில், நிற்க வேண்டி நிலை உள்ளது.

பெண்கள் குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, இங்கு பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us