/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பட்டா வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் முற்றுகை
/
பட்டா வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் முற்றுகை
ADDED : மார் 01, 2024 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : பட்டா வழங்காததை கண்டித்து சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
சங்கராபுரம், சமத்துவபுரம் அருகே 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு அரசுக்கு விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், பட்டா வழங்கக்கோரியும் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை நரிக்குறவர்கள் நேற்று மதியம் 12:00 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அனைவரும் 12:30 மணியளவில் கலைந்து சென்றனர்.

