ADDED : ஆக 25, 2025 10:56 PM
கள்ளக்குறிச்சி ;ஜன்சுரக்ஷா சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான முகாம் வரும் செப். 30ம் தேதி வரை நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜன்சுரக் ஷா சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பான முகாம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வங்கிகள் மூலம் வரும் செப்., 30ம் தேதி வரை நடக்கிறது. விபத்து காப்பீட்டுத் திட்டம் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 70 வயதுவரை உள்ள வர்களுக்கு விபத்து காப்பீடு 2 லட்சம் ரூபாய்க்கு, ஆண்டுக்கு 20 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.
சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய்க்கு, ஆண்டுக்கு 436 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஓய்வூதிய திட்டத்தின் கீழ்வங்கி கணக்கு இல்லா தவர்களுக்கு பிரதமர் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு துவங்கப்படும்.
ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களது கணக்கில் ஆதார் மற்றும் வருமான வரி எண் சமர்ப்பித்து புதுப் பித்து கொள்ளவும்.இந்த சேவைகளை உங்கள் பகுதி முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம்.
வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலமாகவும், வங்கி கிளைக்கு சென்றும் பெறலாம். வங்கியின் ஏ.டி.எம்., மிஷின், மொபைல் செயலி, ஆன்லைன் மூலமாகவும் புதுப்பித்து கொள்ளலாம்.