sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ் டிரைவரை தாக்கி செயின் பறிப்பு ஒருவர் கைது: இருவருக்கு வலை

/

பஸ் டிரைவரை தாக்கி செயின் பறிப்பு ஒருவர் கைது: இருவருக்கு வலை

பஸ் டிரைவரை தாக்கி செயின் பறிப்பு ஒருவர் கைது: இருவருக்கு வலை

பஸ் டிரைவரை தாக்கி செயின் பறிப்பு ஒருவர் கைது: இருவருக்கு வலை


ADDED : மார் 13, 2024 06:54 AM

Google News

ADDED : மார் 13, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்து, டிரைவரிடம் செயினை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.

மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்தவர் பால்பாண்டியன், 32; ஆம்னி பஸ் டிரைவரான இவர் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பதிக்கு புறப்பட்டார். .

மதியம் 2:30 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த பைக்கிற்கு வழி விடாததால், பைக்கில் வந்த மூவரும், பஸ்சை வழிமறித்து நிறுத்தி டிரைவரிடம் தகராறு செய்தனர். அப்போது, மூவரும், பஸ் கண்ணாடியை உடைத்ததுடன், டிரைவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயினையும் பறித்துச் சென்றனர்.

தகவலறிந்த திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், கொட்டாமேட்டைச் சேர்ந்த காளிமுத்து மகன் அரிகிருஷ்ணன்,22; செட்டித்தாங்கல் ராமலிங்கம் மகன் சரண்ராஜ், 30; புதுவேங்கூர் சக்திவேல் மகன் விஜயகுமார், 23; ஆகிய மூவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அரிகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us