ADDED : டிச 19, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகள் தமிழ்தென்றல்,18; இவர், பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்தார்.
கடந்த 16ம் தேதி கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற தமிழ்தென்றல் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

