/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்னை காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
/
தென்னை காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 08, 2025 01:50 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் விவசாயிகள் தென்னை மர காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
சங்கராபுரம் வட்டாரத்தில் தென்னை மர பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. விவசாயிகள் தென்னை மர காப்பிட்டு திட்டத்தில் சேர ஒரு தென்னை மரத்திற்கு, 15 வயது வரை உள்ள மரத்திற்கு ஆண்டுக்கு, ரூ.2.25; 16 முதல் 60 வயதுள்ள மரத்திற்கு ஆண்டுக்கு, ரூ.3.50; காப்பீடு தொகை கட்ட வேண்டும். காப்பீடு செய்ய ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம்,பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், வங்கி வரைவோலை, தென்னை மரத்துடன் விவசாயி புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களடன், இ சேவை மையங்களில், பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

