sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 உதவி பேராசிரியர் தேர்வு 266 பேர் பங்கேற்பு

/

 உதவி பேராசிரியர் தேர்வு 266 பேர் பங்கேற்பு

 உதவி பேராசிரியர் தேர்வு 266 பேர் பங்கேற்பு

 உதவி பேராசிரியர் தேர்வு 266 பேர் பங்கேற்பு


ADDED : டிச 28, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும் அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிட தேர்வு நேற்று நடந்தது.

மாநிலம் முழுதும் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 16ம் தேதி தேர்வு அறிவிப்பு வெளியிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 297 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, நேற்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வில் 31 பேர் ஆப்சென்ட் ஆனதை தொடர்ந்து 266 பேர் பங்கேற்றனர். இதில், 12 மாற்றுத் திறனாளி தேர்வர்கள் இடம்பெற்றனர். அவர்களுக்கு உதவ 2 'ஸ்கிரைபர்' நியமிக்கப்பட்டனர்.

தேர்வு, ஓ.எம்.ஆர்., முறையில் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்தது. இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3:00 மணி முதல் 4:00 மணி வரை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு மையத்தை சி.இ.ஓ., கார்த்திகா பார்வையிட்டார். தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராமகிருஷ்ணன் கண்காணித்தார்.






      Dinamalar
      Follow us