/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.5 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.5 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 13, 2024 05:35 AM

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பைக்கில் எடுத்துச் சென்ற ரூ. 5 லட்சம் பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை தொகுதி நாச்சியார் பேட்டை அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு தோட்டக்கலை உதவி இயக்குனர் முரளி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த திருக்கோவிலுாரை சேர்ந்த தினேஷ், 29; என்பவர் ஓட்டி வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் உரிய ஆவணங்களிலின்றி ரூபாய். 5 லட்சம் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது.
அதன்பேரில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து, உளுந்தூர்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

