ADDED : ஏப் 21, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: பரிகம் கோட்டக்கரையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த பரிகம் கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகப்பிள்ளை மகன் கோபி, 45; மதுபழக்கம் உள்ள இவருக்கு காக்கா வலிப்பு நோய் இருந்தது. கடந்த 18ம் காலை போதையில் இருந்த கோபி அவரது குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார்.
பின், வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் துாக்கு போட்டுக் கொண்டார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

