ADDED : மார் 24, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: பைக் மீது அரசு பஸ் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
சங்கராபுரம் அடுத்த தண்டலை காட்டுகொட்டாயை சேர்ந்தவர் குசேலன், 45; விவசாயி. இவர் நேற்று காலை பைக்கில் சங்கராபுரத்திலிருந்து கள்ளக்குறிச்சி மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குசேலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

