/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
/
ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ADDED : ஆக 22, 2024 11:59 PM
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரு நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஊரக வளர்ச்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுப்பட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.
உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 125 பேர் பங்கேற்றனர்.
தொடர்ந்து இன்றும் (23ம் தேதி) போராட்டம் நடக்கிறது.

