/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பாலாபிஷேகம்
/
சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பாலாபிஷேகம்
ADDED : ஆக 10, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் பாலாபிேஷகம் செய்தனர்.
இக்கோவிலில் 17ம் ஆண்டு அடிமாத பால்குடம் ஊர்வலம் மற்றும் அபிேஷகம் நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 10:00 மணியளவில் கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து சக்தி அழைத்தல், பூங்கரம், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து பால்குடம் ஊர்வலம் முக்கிய சாலை வழியாக சென்று 11:30 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

