sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் குரூப்-2 தேர்வு 13,601 பேர் எழுதுகின்றனர்

/

கள்ளக்குறிச்சியில் குரூப்-2 தேர்வு 13,601 பேர் எழுதுகின்றனர்

கள்ளக்குறிச்சியில் குரூப்-2 தேர்வு 13,601 பேர் எழுதுகின்றனர்

கள்ளக்குறிச்சியில் குரூப்-2 தேர்வு 13,601 பேர் எழுதுகின்றனர்


ADDED : செப் 13, 2024 07:45 AM

Google News

ADDED : செப் 13, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 14-ம் தேதி நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வினை 13,601 பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நாளை 14ம் தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 13,601 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 38, திருக்கோவிலுார் வட்டத்தில் 8 என மொத்தம் 46 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு கண்காணிப்பு அலுவலர்கள், 4 பறக்கும் படைகள், 13 சுற்றுக் குழுக்கள், 46 முதன்மை கண்காணிப்பாளர்கள், 46 ஆய்வு அலுவலர்கள், 63 காவலர்கள், 48 ஒளிப்படப் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வுகள் முழுவதுமாக கண்காணிக்கப்படவுள்ளது.

தேர்வுக்கூடத்திற்குள் மொபைல் மற்றும் மின்னணு சாதனங்களையும் கொண்டுவர அனுமதியில்லை. தேர்வு அனுமதிச் சீட்டினை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us