sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு-கரூர் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் அமை-யுமா?

/

ஈரோடு-கரூர் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் அமை-யுமா?

ஈரோடு-கரூர் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் அமை-யுமா?

ஈரோடு-கரூர் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் அமை-யுமா?


ADDED : ஜன 16, 2026 04:29 AM

Google News

ADDED : ஜன 16, 2026 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு செல்லும் பிரதான சாலை, இரண்டு வழிச்சாலையாக உள்ளது. இதன் வழியாக தென் மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கபடுகிறது. கார்கள், கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் செல்கின்றன. இந்நிலையில் சாவடிப்பாளையம் அருகே கேட்புதுார் மற்றும் பஞ்-சலிங்கபுரம் அருகே ஆரியங்காடு என இரு இடங்களில் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. மழைக்காலத்தில் பாலங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஆரியங்காடு நுழைவு பாலத்தை, மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் மழை நீர் சூழ்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் வாகனங்கள் மொடக்குறிச்சி வழியாக திருப்பி விடப்படுகிறது. சாவடிப்பா-ளையம் அருகேயுள்ள கேட்புதுார் ரயில்வே நுழைவு பாலத்திலும் இதே பிரச்னைதான் நிலவு

கிறது.

இந்த நுழைவு பாலத்தில் முன் அமைக்கப்படும் தடுப்பு கம்-பியில், அடிக்கடி கனரக வாகனங்கள் உரசி விபத்தில் சிக்குகின்-றன. இதுபோன்ற சமயங்களில் போக்குவரத்து பாதிப்பதோடு, ரயில்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படுகிறது.

இந்த இரண்டு ரயில்வே நுழைவு பாலத்தில் நிலவும் சிக்கல்க-ளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் விதமாக, நுழைவு பாலத்தை மேம்பாலமாக மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்- கரூர் சாலையை அகலப்

படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.--






      Dinamalar
      Follow us