/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநிலம் முழுதும் டாக்டர்கள் ஸ்டிரைக் ஐ.எம்.ஏ., மாநில தலைவர் விளக்கம்
/
மாநிலம் முழுதும் டாக்டர்கள் ஸ்டிரைக் ஐ.எம்.ஏ., மாநில தலைவர் விளக்கம்
மாநிலம் முழுதும் டாக்டர்கள் ஸ்டிரைக் ஐ.எம்.ஏ., மாநில தலைவர் விளக்கம்
மாநிலம் முழுதும் டாக்டர்கள் ஸ்டிரைக் ஐ.எம்.ஏ., மாநில தலைவர் விளக்கம்
ADDED : நவ 14, 2024 07:36 AM
ஈரோடு: சென்னை, கிண்டி மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து, மாநில அளவில் டாக்டர்கள் போராட்-டத்தை துவங்கி உள்ளனர்.
இதுகுறித்த இந்திய மருத்துவ சங்க மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், வீடியோ கான்பரன்ஸில் நடந்தது. ஈரோட்டில் இருந்து மாநில தலைவர் அபுல்ஹசன் பங்கேற்றார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை கிண்டி மருத்-துவமனையில் டாக்டர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம், டாக்-டர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.இதை கண்டித்தும், பாலாஜி மீது தாக்குதல் நடத்தியவர் மீது தண்-டனை சட்டம் 48/2008 ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்-தியும், டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு கோரி நேற்று மாலை, 6:00 மணி
முதல் இன்று மாலை, 6:00 மணி வரை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி போராட்டம் நடந்து வருகிறது.இப்போராட்டத்தில் மாநில அளவில், 7,900 தனியார் மருத்துவம-னைகள், 28,000 கிளினிக்குகளில் பணியாற்றும், 45,000 டாக்டர்கள் பங்கேற்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவு வழங்கம் போல இயங்கும். புறநோயாளிகள் பிரிவு,
அவசரம் அல்லாத, அறுவை சிகிச்சை செய்யப்பட மாட்டாது.இவ்வாறு அவர் கூறினார்.

