/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
படை வீரர் நாள் அனுசரிப்பு குடும்பத்தாருக்கு மரியாதை
/
படை வீரர் நாள் அனுசரிப்பு குடும்பத்தாருக்கு மரியாதை
படை வீரர் நாள் அனுசரிப்பு குடும்பத்தாருக்கு மரியாதை
படை வீரர் நாள் அனுசரிப்பு குடும்பத்தாருக்கு மரியாதை
ADDED : ஜன 16, 2026 04:32 AM
ஈரோடு: ஈரோட்டில், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், 10வது படைவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
நாட்டுக்காக முப்படைகளில் பணிபுரிந்து, இன்னுயிர் நீத்த படைவீரர்கள், உடல் ஊனமுற்றவர்கள் நினைவாக, அவர்களுக்கு மரியாதை செலுத்த படைவீரர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. போர், போரையொத்த நடவடிக்கைகளில் வீர மரணம் அடைந்த, உடல் ஊனமற்ற படைவீரர்களுக்கும், அவர்களது தியா-கத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் மரியாதை செலுத்-தினர்.
போரில் ஊனமுற்ற படைவீரர்கள், போரில் வீர மரணமடைந்த, 7 வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா, 25,000 ரூபாய் என, 1.75 லட்சம் ரூபாய் மதிப்பில் வருடாந்திர பராமரிப்பு மானியம், பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் புஷ்ப-லதா, லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) நாகராஜன், முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் சாமுவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

