ADDED : மார் 03, 2026 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, முள்ளாம்பரப்பில் இருந்து நாதக்கவுண்டன்பாளையம் செல்லும் பிரதான சாலையில், புதிதாக அரசின் டாஸ்மாக் கடை அமைக்க உள்ளனர்.
இதற்கான இடத்தை தேர்வு செய்து, கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்விடத்தை சுற்றிலும் குடி-யிருப்புகள், கடைகள் உள்ளது. இதனால் அவ்விடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது எனக்கூறி, அப்பகுதியினர் நேற்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இவ்விடத்தில் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இரண்டு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால், டாஸ்மாக் கடை அமைந்தால் விபத்து அதிகரிக்கும். இவ்விடத்தில் கடையை அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

