ADDED : டிச 21, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை- செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை- முன் நேற்று நடந்தது. தலைவர் ரூபி தலைமை வகித்தார்.
அரசு ஊழியர் சங்கம் வட்ட கிளை செயலாளர் கதிரவன், கோபி கோட்ட சாலை பணியாளர் சங்கம் தலைவர் ஹரிசந்திரன் பேசிர். ஊதிய உயர்வு கேட்டு, சென்னையில் உண்ணாவிரத போரட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடந்தது.

