/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சம்பத் நகர் ஓட்டுச்சாவடியில் 3 முறை இயந்திர கோளாறு
/
சம்பத் நகர் ஓட்டுச்சாவடியில் 3 முறை இயந்திர கோளாறு
சம்பத் நகர் ஓட்டுச்சாவடியில் 3 முறை இயந்திர கோளாறு
சம்பத் நகர் ஓட்டுச்சாவடியில் 3 முறை இயந்திர கோளாறு
ADDED : ஏப் 20, 2024 07:17 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி, ஈரோடு மாநகராட்சி சம்பத் நகரில் தனியார் பள்ளியில், ஓட்டுச்சாவடி எண்-97ல் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
மதியம், 3:30 மணியளவில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பழுதை சரி செய்த பிறகு, 30 நிமிடம் தாமதமாக துவங்கியது. மீண்டும் மாலை, 5:00 மணியளவில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு ஏற்பட்டு, 15 நிமிடத்தில் சரி செய்தனர். மாலை, 5:50 மணியளவில் மூன்றாவது முறையாக இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் முகவர்கள் கேள்வி எழுப்பவே, வேறு இயந்திரம் மாற்றப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது. 6:00 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்கள் பள்ளிக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின் வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

