ADDED : மார் 04, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி : பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது.
குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருன்றனர். தற்போது தடுப்பணை வழியாக, 100 கன அடி மட்டுமே தண்ணீர் வெளியேறியதால், பயணிகள் அருவியில் குளிக்க வழியின்றி நேற்று ஏமாற்றமடைந்தனர். இதனால் பவானி ஆற்றில் குட்டையாக தேங்கி நின்றி தண்ணீரில் பயணிகள் குளித்தனர். அதேசமயம் நேற்று குறைந்த சுற்றுலா பயணிகளே வந்ததால், தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

