ADDED : ஜன 24, 2026 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்; ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்-நிலை பள்ளியில், பிளஸ் ௧ மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்-தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா தேவி தலைமை வகித்தார். நம்பியூர் தி.மு.க., பொறுப்-பாளர் ஆனந்தகுமார், வரதராஜ் முன்னிலை வகித்தனர். நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்-தில்குமார், நம்பியூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மலையப்பாளையம், சாவக்-கட்டுபாளையம், மோளபாளையம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும், 800 பேருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்-டது.

