ADDED : ஏப் 09, 2026 03:36 AM

அ நிறம் | அளவு
காங்கேயம்: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெள்ளகோவில், விளாத்திகுளம், வாணியம்பாடி, மங்கலபட்டி, மணப்பாறை, முத்துார் பகுதி விவ-சாயிகள், 62 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு அதிகமாக ஒரு கிலோ, 168.99 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 114.99 ரூபாய்க்கு ஏலம் பேனது. மொத்தம், 91 லட்சத்து, 51 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடை-பெற்றது. தொடர்ந்து வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2026 சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேங்காய் பருப்புகளை கொண்டு காட்சிப்படுத்தப்பட்டது.
