/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண் எஸ்.எஸ்.ஐ.,யிடம் அடாவடி; டிரைவர் கைது
/
பெண் எஸ்.எஸ்.ஐ.,யிடம் அடாவடி; டிரைவர் கைது
ADDED : ஜன 11, 2026 04:51 AM
கோபி:கோபி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, திங்களூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., செந்தமிழ்செல்வி. ஏட்டுவுடன் பெருந்-துறை சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து சென்றார்.
காசுக்காரன்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது, திங்களூரை சேர்ந்த டிரைவர் திவாகர், 54, சத்தம்போட்டு தகாத வார்த்தை பேசிக் இதைக்கண்ட இருவரும் அமைதியாக வீட்டுக்கு செல்-லும்படி வலியுறுத்தினர். அதற்கு திவாகர், 'நீங்கள் சொல்வதை நான் கேட்க மாட்டேன் எனக்கூறி, பெண் எஸ்.எஸ்.ஐ.,யை தகாத வார்த்தை பேசியுள்ளார். இருவரின் சட்டையை பிடித்து இழுத்து தள்ளி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எஸ்.எஸ்.ஐ., செந்தமிழ்செல்வி புகா-ரின்படி, திங்களூர் போலீசார் திவாகரை நேற்று கைது செய்-தனர்.

