sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாவட்டத்தில் மாட்டு பொங்கல் கோலாகலம்

/

ஈரோடு மாவட்டத்தில் மாட்டு பொங்கல் கோலாகலம்

ஈரோடு மாவட்டத்தில் மாட்டு பொங்கல் கோலாகலம்

ஈரோடு மாவட்டத்தில் மாட்டு பொங்கல் கோலாகலம்


ADDED : ஜன 17, 2026 04:45 AM

Google News

ADDED : ஜன 17, 2026 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று மாட்டு பொங்கல் விழா கோலாக-லமாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு நகரில் வசிக்கும் விவசாயிகள் தங்களுடைய காளை, பசு மாடுகளை நீர்நிலைகளுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டினர். பின் கொம்புகளில், வர்ணங்கள் தீட்டி புதிய மாலைகள், மணிக-ளுடன் அலங்கரித்தனர். இதேபோல் ஏர் கலப்பை, மண்வெட்டி உள்பட பொருள்களை கழுவி சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்தனர். பின்னர் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபட்-டனர்.

தொடர்ந்து மாட்டு கொட்டகையில் சாணத்தால் தெப்பம் கட்டி, அதில் பாலை ஊற்றி வழிபட்டனர். பின்பு மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, பழம் ஊட்டி மகிழ்ந்தனர். இதேபோல் கோசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மாடுகளுக்கு கோமாதா பூஜை செய்து மாட்டு பொங்கலை கொண்டாடினர்.

* பவானி சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் ஆடு, மாடு-களை தண்ணீர் ஊற்றி, குளிப்பாட்டி, புது கயிறுகள் கட்டி, மண்-பானையில் பொங்கல் வைத்து, கால்நடைகளை வழிபாடு செய்-தனர்.

* புன்செய்புளியம்பட்டி, பனையம்பள்ளி, மாதம்பாளையம், காவிலிபாளையம், நொச்சிக்குட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்-பட்ட கிராமங்களில் உள்ள, மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, சிறப்பு பூஜை செய்து, பொங்கல் வைத்து கொண்டாடினர். கிராமங்களில், பல்வேறு இசை மற்றும் கலா-சார, பாரம்பரிய போட்டிகளை நடத்தினர். பொதுநல சங்கம் சார்பில் நடந்த மாட்டு பொங்கல் விழாவில் ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், கபடி, கோலப்போட்டி, நடனம் உள்பட பல்-வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. கிராமங்-களில் மக்கள், குழுக்களாக குலவை ஒலி எழுப்பி பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு படையலிட்டு, கரும்பு உடைத்தும், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆடியும் மாட்டு பொங்கலை கொண்டாடினர்.

* கோபி அருகே பிள்ளையார் கோவில் துறை என்ற இடத்தில் செல்லும் தடப்பள்ளி பாசன வாய்க்காலில், கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடு, எருமைகளை குளிப்பாட்டினர். பின் அதன் கொம்புகளுக்கு பெயின்ட் அடித்து, மூக்கணாங்கயிறு, தலைக்கயிறு, கழுத்து கயிறு உள்ளிட்டவைகளை கட்டி, மாடு-களை அலங்கரித்து, மாட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us