ADDED : ஏப் 26, 2026 01:09 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்டம், குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பன், 76; ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவர், ஈரோடு அருகே, சோலார் பகுதியில் வீடு கட்டு கிறார். விளக்கேத்தியை சேர்ந்த கட்டட மேஸ்திரி தேவராஜ், 44, சிவகிரியை சேர்ந்த தொழிலாளி மாரியம்மாள், 55, ஆகியோர், நேற்று காலை, கட்ட ட பணியில் ஈடுபட்டனர்.
மூன்றாவது தளத்தில் மணலை கொண்டு செல்லும் இயந்திரத்தை, தேவராஜ், மாரியம்மாள் ஆகியோர், இழுத்த போது, எதிர்பாராத விதமாக, இருவரும் தரையில் விழுந்தனர். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
