sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் காற்றில் பறந்த கலெக்டரின் உத்தரவு

/

மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் காற்றில் பறந்த கலெக்டரின் உத்தரவு

மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் காற்றில் பறந்த கலெக்டரின் உத்தரவு

மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் காற்றில் பறந்த கலெக்டரின் உத்தரவு


ADDED : டிச 20, 2025 07:16 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் இருந்து தென் மாவட்டத்துக்கு செல்லும் பஸ்களுக்-காக, சோலாரில் அமைக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட், கடந்த, 4ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கிருந்து கரூர் மார்க்கமாக, 98 அரசு பஸ், வெள்ளகோவில் மார்க்கமாக, 19 அரசு பஸ்கள் என, 117 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களை பொறுத்தவரை கரூர் மார்க்கமாகத்தில், 19, வெள்ளகோவில் மார்க்கத்தில், 22 என, 41 பஸ்கள் இயக்கப்-படும் என தெரிவிக்கபட்டது.

ஆனால் தனியார் பஸ்கள் ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை இயக்கப்படுவதால், அரசு பஸ்களில் ஏறுவதை பயணிகள் தவிர்ப்-பதாக அரசு போக்குவரத்து கண்டக்டர்கள் குற்றம்சாட்டினர். இந்-நிலையில் வெள்ளக்கோவில், கொடுமுடி, கரூர், திருச்சி, திண்-டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், காரைக்கால், திருச்-செந்துார், நாகை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், சோலார் பஸ் ஸ்டாண்டை மையமாக கொண்டு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்காத பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கந்தசாமி கடந்த, 18ம் தேதி அறிக்கை மூலம் எச்சரித்தி-ருந்தார்.

இந்நிலையில் கலெக்டர் உத்தரவை மீறி, மத்திய பஸ் ஸ்டாண்-டுக்கு, சில தென் மாவட்ட தனியார் பஸ்கள் நேற்று வந்தன. ரேக்-குகளில் நிறுத்தாமல், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நின்று பயணி-களை ஏற்றி சென்றன.






      Dinamalar
      Follow us