/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊமத்தங்காயை தின்ற குழந்தைகளுக்கு வாந்தி
/
ஊமத்தங்காயை தின்ற குழந்தைகளுக்கு வாந்தி
ADDED : டிச 23, 2025 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: -சத்தியமங்கலத்தை அடுத்த ராமபையலுார், கலைஞர் நகரை சேர்ந்த அபிஸ் மகன் சிரஜித் வருண், 4; மணி மகன் நிஹாஸ்ரீ, 5; ஜோதி மகள் அனிஸ், 6; மூவரின் பெற்றோரும் நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில், குழந்தைகள் நேற்று மதியம் விளையாடி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மூவரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்-கினர். அக்கம்பக்கத்தினர் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தந்து வரவழைத்தனர். மூவரும் சத்தி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் ஊமத்-தங்காயை தவறுதலாத தின்றது தெரிய வந்தது.

