/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அழகுக்கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு
/
அழகுக்கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு
ADDED : மார் 06, 2024 02:16 AM
ஈரோடு:ஈரோடு,
கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வளாகம், 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி
நிலையம் செயல்படுகிறது.
இங்கு வரும், 15 முதல் ஏப்., 22 வரை, 30
நாட்களுக்கு பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்பு நடக்க
உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசம். பயிற்சி முடிவில் அரசு
சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45
வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
வறுமை கோட்டுக்கு
கீழ் உள்ளோர், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவர்களது
குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம்
உள்ளவர்கள், 87783 23213, 0424 2400338 என்ற எண்களில் முன்பதிவு
செய்து பயிற்சி பெறலாம்.

